திருமதி. கமலாதேவி சதாசிவம்

கமலாதேவி சதாசிவம்

தோற்றம்: 30 செப்டம்பர் 1951 - மறைவு: 05 ஜூன் 2025

களுத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சதாசிவம் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகுமார் (United Pharmacy - பதுளை), நிரஞ்சலா (கனடா), மனோஜ்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

பிரியதர்ஷினி, சதீஸ்குமார், நதீஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஹம்சினி, சதுஷி, ஜனார்த், ருத்வி, வியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-06-2025 வெள்ளிக்கிழமை மாலை 6:00 முதல் பொரளை A.F.Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2025 04:00)