Mrs Kamalambigai Ratnasingam

Kamalambigai Ratnasingam

Deceased: 18 January 2024

யாழ். நவாலி தெற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை இரத்தினசிங்கம் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், 

திரு. கந்தையா இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைவாணி (ஓய்வுபெற்ற முகாமையாளர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), இரவீந்திரன், பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இரத்தினஜோதியின் அன்பு மாமியாரும்,

பார்த்தீபன், கீர்த்தனன், கல்யாணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சுப்பிரமணியம், சிவலாம்பிகை, சிவசண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2024 05:00)