செல்வி. கமலநாயகி நாகலிங்கம்
தோற்றம்: 24 மே 1935 - மறைவு: 23 செப்டம்பர் 2025
யாழ். பருத்தித்துறை 1ம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இல- 132, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலநாயகி நாகலிங்கம் அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மயில்வாகனம், இராஜேஸ்வரி, ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான E.S பியதாஸ, கமலாதேவி, துரைசிங்கம் மற்றும் அமிர்தசெல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றூபினி அவர்களின் பெரிய தாயாரும்,
வரதராஜா (மாருதி ரேடிங் சென்ரர், ஸ்ரான்லி வீதி) அவர்களின் அன்பு மாமியாரும்,
அபிநயா, திவ்யா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-09-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 02:00 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
