​செல்வன். கமல்தேசப்பிரிய டிக்சன்

கமல்தேசப்பிரிய டிக்சன்

தோற்றம்: 17 ஜூன் 2014 - மறைவு: 06 ஜூலை 2025

மட்டக்களப்பு பனிச்சஞ்கேணியைப் பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். கமல்தேசப்பிரிய டிக்சன் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கமல்தேசப்பிரிய - பிரியா தம்பதியினரின் பாசமிக்க மகனும்,

அபிதா, ரிக்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - மாதம்மா, சேபால - விமலாபதி ஆகியோரின் பேனும்,

சிறிகரன், ஜெயக்குமார், பிறேம், ரதி காலஞ்சென்ற சீதாலெட்சுமி, சமந்தா, கலைமதி ஆகியோரின் மருமகனும்,

ஜெயந்தியின் பெறாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-07-2025 திங்கட்கிழமை மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பனிச்சங்கேணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2025 04:00)