திருமதி. கனகாம்பிகை கனகசபாபதி (பேபி)
தோற்றம்: 26 பெப்ரவரி 1930 - மறைவு: 15 செப்டம்பர் 2022
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை கனகசபாபதி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துறையப்பா வாடாமலர் தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
காஞ்சனா, ரஞ்சன், சேகர், ஸ்ரீதர், பாஸ்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகபூசனி, நவரட்ணராஜா மற்றும் கமலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நவரட்ணம், நலாயினி, லோகேஸ்வரி, சாந்தா, காமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பபித்தா, அருண், மோனிக்கா, லவன், ரூபி, லஷ்மன், தர்மின், அர்ஜீன், சங்கரி, அபிராமி, கருணி, ரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காஜா, ரோஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
www.tamilthakaval.org
