திருமதி. கனகம்மா இராசமுத்தையா
தோற்றம்: 21 மே 1932 - மறைவு: 07 பெப்ரவரி 2025
யாழ். நல்லூர் நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகம்மா இராசமுத்தையா அவர்கள் 007-02-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாயன்மார்கட்டு சுந்தரம்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,
டாக்டர் இராசமுத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பாலசிங்கம், சச்சிதானந்தம், லட்சுமிப்பிள்ளை, நாகேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி, விமலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
முருகதாஸ், இரத்தினராசா, பொன்னரசி ஆகியோரின் பாசம் நிறைந்த தாயாரும்,
ஜெயகௌரி, குமுதினி, கோபாலரட்ணம் ஆகியோரின் மாமியாரும்,
சுசி, கார்த்தி, சிந்து, Piyush, கௌரீசன், ஆஷா, அஷ்வினி, நிதர்சன்,ஜாதவி, செந்தூரன், ஜனகன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
Karna, Kali, Dravin, Arya, Xaviar, zia, Aran, Swasthi, Hirushvi ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-02-2025 புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் Macquarie மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
