திருமதி. கனகராணி சண்முகலிங்கம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை-யாழ். வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி)
தோற்றம்: 29 அக்டோபர் 1934 - மறைவு: 10 ஆகஸ்ட் 2024
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகராணி சண்முகலிங்கம் அவர்கள் 10-08-2024 சனிக்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை-நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குட்டிதம்பி-கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஜாந்தினி (கனடா), கிரிஜாந்தினி (கனடா), பிரணவரூபன் (ஐக்கிய இராச்சியம்), சுகந்தினி (அவுஸ்திரேலியா), ஜமுனாதீரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சிவபாலரட்ணம் (கனடா), ஆனந்தகிருஷ்ணன் (கனடா), வத்சலா (ஐக்கிய இராச்சியம்), நிராகுலகாந்தன் (அவுஸ்திரேலியா), கலையரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துளசிகா, கௌசிகா, அபிராம், மிதுனா - கனடா, பிரவீனா, நவீனா-ஐக்கிய இராச்சியம், கேஷினி, கேஷவா-அவுஸ்திரேலியா, சண்முகப்பிரியா, ஐஸ்வரியா, ஶ்ரீஹரி (ஐக்கிய இராச்சியம்), அஜேஷச, கேசி (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற இந்திராணி, சுதேசராணி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 12-08-2024 திங்கட்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
