திரு கனகரத்தினம் கிருபானந்தராஜா
(முன்னாள் நெடுங்கேணி கிராம சேவகர், A K R Super Store முன்னாள் உரிமையாளர்)
தோற்றம்: 03 மே 1956 - மறைவு: 01 டிசம்பர் 2023
கொழும்பு வௌ்ளவத்தையை பிறப்பிடமாகவும், யாழ் வட்டு வடக்கு, கலைநகர், சித்தங்கேணியை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Plumstead பகுதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கிருபானந்தராஜா அவர்கள் வௌ்ளிக்கிழமை 01-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதினரின் பாசமிகு மருமகனும்,
அஞ்சலிதேவி அவர்களிக் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற புனிதவதி, அருந்தவராசா, காலஞ்சென்றவர்களான லலிதாதேவி, குலேந்திரராசா, கருணேஸ்வரராசா மற்றும் லோகேஸ்வரி, சத்தியதேவி, காலஞ்சென்றவர்களான தயானந்தராசா, நித்தியானந்தராசா, நேமிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கணேஸ்வரநாதன், கௌரிமனோகரி, இணேகா, டொறின், ஜீவமணி, நவேந்திரராசா, அன்பழகன், கலைவிழி, காந்தரூபி, உதயமலர், சச்சியானந்தசிவம், கமலவேணி, வேதானந்தசிவம், அரசகுலராணி, காலஞ்சென்ற அற்புதநாதன், கலையரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
