திருமதி. கனகரத்தினம் சறோஜா (டில்லி)
தோற்றம்: 13 மார்ச் 1956 - மறைவு: 01 ஆகஸ்ட் 2024
யாழ். சங்கத்தானை சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரத்தினம் சறோஜா அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு-தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா-நாகம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
கனகரத்தினம் (கனகராஜ்-திருநெல்வேலி) அவர்களின் அன்பு மனைவியும்
ஜெயலதா (சுவிஸ்), சுஜாகர் (பிரான்ஸ்), ஷாலிகா (ஜேர்மனி) மற்றும் காலஞ்சென்ற ஜெயகாந்த் ஆகியோரின் அன்பு தாயாரும்,
தர்மராஜா (சுவிஸ்), சசிகுமார் (ஜேர்மனி) ஜெகந்தியா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வேதநாயகி மற்றும் காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சிவபாலன், தங்கராசா, மகேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
கலாநிதி (பட்டு), அரியமலர் (ஜெயந்தி) மற்றும் காலஞ்சென்றவர்களான நல்லையா, குலேந்திரராஜன், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வர்ணிக்கா, ஹரிஸ், வருண், விகாஷன், திவாஷினி, ரிகாஷன், யாஷ்வினி, அதிஷன் ஆகியோரின் ஆசை பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் Mémentorium du centre Funéraire de Mulhouse: 55, Rue de Dinard 68110 Illzach இல் 09-08-2024 முதல் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை வரை பிற்பகல் 3.00 - 4.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-08-2024 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று புகழுடல் தகனம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்
முகவரி:-
15. Rue de la Brume
68100 Mulhouse.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
