திருமதி. கனகரட்ணம் சின்னம்மா
தோற்றம்: 14 ஏப்ரல் 1934 - மறைவு: 22 பெப்ரவரி 2025
யாழ். சுன்னாகம் மேற்கு, பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரட்ணம் சின்னம்மா அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கமுத்து தம்பதியினரின் இளையமகளும், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா - சீதேவன் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகரன், ரவீந்திரன், நளினி, புவீந்திரன், சாந்தினி, முகுந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவராசா, கலைச்செல்வி, ரசி, ராதிகா, ராஜன், அமரசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை, செல்வத்துரை, அன்னப்பிள்ளை, சரஸ்வதி மற்றும் சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சம்யுக்தா, சரண்யா, மதுராங்கன், பிரதீஸ், பிரசாந், பிரவீண், ரஜனுயா, கார்த்திகா, கிரிசாந், தர்மிகா, தர்ஷிகா, தருணிகா, ரூபிதா, அகிலன், சிந்தூரி, காலஞ்சென்ற ரிஷிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாரா, மிளிர்ணன், வெண்பா, வெண்ணிலா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
