திருமதி. கனகரட்ணம் தவமலர்

கனகரட்ணம் தவமலர்

தோற்றம்: 12 ஜூலை 1957 - மறைவு: 11 டிசம்பர் 2024

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகரட்ணம் தவமலர் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-நகுலேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகளும், 

காலஞ்சென்ற Dr. கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. காண்டீபன் (Orthopaedic Surgeon General Hospital - Nawalapitiya), பிரதீபன் (கனடா), ஜனனி, பாமினி ஆகியோரின் அன்பு தாயாரும்,

செந்தில்குமார், வேணி, பிரியா, கதிர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராம், புவனிகா, தியா, தேவ், திரிவிக்ரம், தன்விந்த், நயனி, சிவகான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 12-12-2024 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண B மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2024 05:00)