திரு. கனகசபை பேரின்பநாதன்
தோற்றம்: 26 ஜனவரி 1952 - மறைவு: 14 மே 2026
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதி - பாரதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை பேரின்பநாதன் அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலாவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
லியானி, யுகதாஸ், கவிவர்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யதீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
விஸ்மிகா, ஹரிசன் ஆகியோரின் அன்புப் பேரனாரும்,
பூலோகசிங்கம், பற்குணநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், நாகசோதி, ஜெகசோதி, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோதிமதி, காலஞ்சென்ற றஞ்சினி, இந்திராணி, மாணிக்கவாசகர், ஜெயக்குமார், பாபுஜீ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 39/2 பாரதி வீதி, கச்சேரி நல்லூர் ரோட்டில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
