Mr. Kanagasabai Subramaniam
(Retired Post Master)
Date of Birth: 05 February 1939 - Deceased: 20 April 2025
யாழ். காரைநகர் பெரியமணலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை சுப்பிரமணியம் அவர்கள் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை - தங்கப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
தம்பிப்பிள்ளை (அடைவுகடை மாப்பாணவூரி நெடுங்காடு) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிதேவி அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,
சிவசங்கர் அவர்களின் மாமனாரும்,
கிருத்திகாவின் அம்மப்பாவும்,
காலஞ்சென்ற செல்வநாயகம், சிவபாக்கியம், சரஸ்வதி, நடராஜா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 - 5:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 5:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
