திருமதி. கனகாம்பிகை தவராஜா
தோற்றம்: 25 ஜனவரி 1952 - மறைவு: 08 செப்டம்பர் 2025
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகாம்பிகை தவராஜா அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - கனகமணி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற தவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனோதினி, நிலோஜினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிரிதரன், அகிலன், சிவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரேஸ், ஆயுஷன், அனிஷன், கெளசல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற தில்லை நடேசன், பாலாம்பிகை, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-09-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
