Mr. Kanapathipillai Rasarathnam
Deceased: 12 February 2025
யாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும், இல-903, சில்வா வீதி, வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு-சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், பொன்னம்மா, செல்லம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்பு சகோதரனும்,
பேரின்பநாதன் (யாழ் பான்சி), இந்திராதேவி, பாக்கியநாதன் (ஆசிரிய ஆலோசகர் - வவுனியா வடக்கு வலயம்), பற்மநாதன் (திருத்தணி பல்பொருள் வாணிபம் - வட்டக்கச்சி), சத்தியநாதன் (கிராம அலுவலர் - மாயனூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரஞ்சனாதேவி, கணேசமூர்த்தி, சிறீவாணி, தனலட்சுமி, ரஞ்சிதமலர் ஆகியோரின் மாமனாரும்,
பிரசாந்தன், பிரசன்னா, கஜனன், துவாரகன், கிருசாந், வித்தகன், வதுசன், நிவேதனா, ஜிதுர்சன், லக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆருத்ரா, ஆரா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மம்மில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
