திரு. கணபதிப்பிள்ளை சபாநாயகம்
(நில அளவையாளர் - கொழும்பு திணைக்களம்)
மறைவு: 09 ஜனவரி 2025
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவில், தெகிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சபாநாயகம் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று தெஹிவளையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் புதல்வனும்,
சரஸ்வதி (லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஜா, நிரூபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரனின் மாமனாரும்,
சிவபாக்கியம் (இலண்டன்) அவர்களின் சகோதரனும்,
தனஞ்செயனின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான செல்லக்கண்டு, சூரியபரஞ்சோதி, தவராசா, செல்வராசா, சிவராசா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-01-2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் 11-01-2025 சனிக்கிழமை மாலை 5:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
முகவரி:-
5A, 1/1, Cambal Place,
Dehiwala.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
