திரு. கணபதிப்பிள்ளை இராசையா

கணபதிப்பிள்ளை இராசையா

தோற்றம்: 11 டிசம்பர் 1939 - மறைவு: 12 நவம்பர் 2022

யாழ். கோப்பாய் மத்தி கட்டுப்பாளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசையா அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று கோப்பாயில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேஸ்வரி (நேசம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்வராணி, பத்மராணி, சிவனேஸ்வரன், பரமேஸ்வரன், ராஜேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீதாஸ்(ஸ்ரீ), சிவகுமார் (அப்பன்), கிருஷாந்தி, கர்ஜினி, கிருத்திகா, பிரமினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மெளனிஷா, நதுஷா, ரிசன், திசா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

அபிஷேக், அபினேஷ், கிஷான், அபிஷா, ராகவி, சயந்தவி, விதேஷ், லக்‌ஷி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

காலஞ்சென்ற சிவாஞானம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

செல்வகனபராஜா, காலஞ்சென்ற வக்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பர்வதம், தங்கம்மா, பாக்கியம், வைத்திலிங்கம் மற்றும் பொன்னம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் வடக்கு கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2022 17:28)