Dr. Kandaiha Arasalingham

(கால்நடை வைத்தியர்)

Kandaiha Arasalingham

Deceased: 25 July 2026

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அரசலிங்கம் கந்தையா அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு கந்தையா (முன்னாள் பேராசிரியர் யாழ். பல்கலைக்கழகம் நரம்பியல் நிபுணர்) - தங்கமுத்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற இளையவர் கந்தையா - நாகமுத்து தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் கணவரும்,

Dr.அஜினி அவர்களின் தகப்பனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சரஸ்வதி, அருலிங்கம், துரைசிங்கம் மற்றும் ராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-07-2026 திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 301 3040

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2026 00:00)