Mr. Kandiah Ratneswaran

Kandiah Ratneswaran

Deceased: 17 March 2025

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இல- 173, திருநகர் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இரட்னேஸ்வரன் அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகனும்,

நடராசா (ராசா - ஓய்வுபெற்ற ஊழியர், இலங்கை புகையிரத திணைக்களம், கிளிநொச்சி), நாகேஸ்வரி (கிளிநொச்சி), காலஞ்சென்ற நவரத்தினம் (ரத்தினம் - பிரான்ஸ்), நாகராசா (குட்டி - ஜேர்மனி), ஞானேஸ்வரன் (ஈசன் - ஓய்வுபெற்ற ஊழியர், இலங்கை புகையிரத திணைக்களம், வவுனியா) ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற கனகரட்னம், சரஸ்வதி (ராணி - கிளிநொச்சி), ஞமுனா (பிரான்ஸ்), நாகேஸ்வரி (ஜேர்மனி), காலஞ்சென்ற கலா, மலர் (வவுனியா) ஆகியோரின் மைத்துனரும்,

நகுலேஸ்வரன் (பிரான்ஸ்), பாலச்சந்திரன் (சுவிஸ்), பிரேமச்சந்திரன் (பிரேமா - கிளிநொச்சி), ஜெயன் (சுவிஸ்), செல்லா (கிளிநொச்சி), ஜீன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கர் (கிளிநொச்சி), யதன் (தபால் திணைக்களம் - கிளிநொச்சி), ரஞ்சி (நயினாதீவு), நகுலி (சுவிஸ்), ரதி (சுவிஸ்), ராஜி (சுவிஸ்), விஜி (பிரான்ஸ்), சுஜி (டென்மார்க்), பிரவினா (பிரான்ஸ்), ரஜனி (ஜேர்மனி), தீபன் (ஜேர்மனி), நிலானி (சுவிஸ்), ரமணன் (கலாவரன் - இலண்டன்), குமணன் (யாழ்ப்பாணம்), கீர்த்திகா (ஆசிரியை - வவுனியா தமிழ் மாகவித்தியாலயம்), மிது (பரந்தன்) ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 18-03-2025 செவ்வாய்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்ப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- சகோதரர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2025 04:00)