Mr. Kandasamy Ananthamurthy
Deceased: 17 December 2025
யாழ். நாகர்கோவில் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி ஆனந்தமூர்த்தி அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வ.வ.கந்தசாமி - செல்லாச்சி தம்பதியினரின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் - நவமணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
சாந்தி (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜியா (ஆசிரியை), வைகரன் (பொறியியலாளர்), சங்கீதா (பொறியிலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமானந்தராஜா (தபால் ஊழியர் ), நிசாங்கர் (விரிவுரையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்னக்கொடி, அன்னலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியை), ஆனந்தராசா (ஓய்வுபெற்ற தபால் ஊழியர்), அன்னகேசரி (ஒய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்), அன்னரூபி (ஆசிரியை) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
முருகேசு (அமெரிக்கா), மாலினி, சாந்தி, புவனேந்திரம் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
ஹரிணி, ஆருதி, இனியா ஆகியோரின் செல்லப் பேரனும்,
சக்தி, ராஜ்குமார் (கனடா), சிவாயநம (கனடா), உதயசங்கர் (ஆசிரியர்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று நாகர்கோவில் கிழக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல்10:00 மணியளவில் நாகர்கோவில் கிழக்கு இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
