Mr. Kandasamy Ranganathan

Kandasamy Ranganathan

யாழ். சுழிபுரம் பொன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமி திக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி இரங்கநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குலநாயகம் (சட்டத்தரணி)-பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

சத்தியபாமா (இளைப்பாறிய அதிபர்-யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்) அவர்களின் அன்புக்கணவரும்,

வசந்தகுமாரி, வனிதா (கனடா), காலஞ்சென்ற வனஜா, குமரநாதன் (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பராசக்தி, காலஞ்சென்ற விஜயலட்சுமி (ஆசிரியை), அம்பிகை, அருந்ததிதேவி, சிநாதபிள்ளை (யோகு), காலஞ்சென்ற அருளானந்தம், வசுமதி (இத்தாலி) ஆகியோரின் மைத்துனரும்,

தயாளினி, சுதர்சன், சுகந்தினி ஆகியோரின் சித்தாபவும்,

விதுஷன், கஜானன், கோகன், கார்த்திகேயன் ஆகியோரின் பெரியப்பாவும்,

சிவதீபன், பார்த்தீபன், கோகுலன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரின் திக்கரை இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் களபூமி தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2024 04:00)