திரு. கந்தசாமி சிறீஸ்கந்தநாதன் (உடையார் சிறீ)

கந்தசாமி சிறீஸ்கந்தநாதன் (உடையார் சிறீ)

தோற்றம்: 09 ஜனவரி 1964 - மறைவு: 03 நவம்பர் 2025

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், மணற்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சிறீஸ்கந்தநாதன் அவர்கள் 03-11-2025 திக்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி - சிவயோகம் தம்பதியினரின் மருமகனும்,

வேதநாயகி (வனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா (இலண்டன்), யசிகலா (இலண்டன்), மயூரன் (கிராம அலுவலகர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

பாலசூரியன், துஷாந்தன், வதனி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துஜிந்தன், பவினாஷ், திவ்யன், சேந்தன், கவின், நிவேதனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், தெய்வநாயகி மற்றும் தேவசாயினி, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உமாதேவி, காலஞ்சென்றவர்களான மகாதேவன், உருத்திரமூர்த்தி, சோதிநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தீவங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2025 00:00)