யாழ். கரவெட்டி மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி யோகேந்திரம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - மீனாட்சி தம்பதியினரின் புதல்வன்,
ரேவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கபிலாகர், சஜீபன், விதுர்சன், மிதுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானேந்திரன் (ஜேர்மனி), கிருஷ்ணவேணி, கிருஷ்ணகுமாரி, மங்களேஷ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், சிவயோகநாதன், றங்கநாதன், விமலாதேவி, சிவசெந்திநாதன், சிவனேஷ்வரன் (சுவிஸ்), சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,
உதயசந்திரனின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-02-2024 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

