போதகர் கந்தையா சந்திரசேகர் (Pastor சந்துரு)

கந்தையா சந்திரசேகர் (Pastor சந்துரு)

தோற்றம்: 13 ஜூன் 1965 - மறைவு: 15 பெப்ரவரி 2024

"நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்

விசுவாசத்தை காத்துக் கொண்டேன்"

                                                                                        (II தீமேத்தேயு 4:2)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பில் தன்னை கர்த்தருடைய பணிக்காகவும் அர்ப்பணித்த போதகர் கந்தையா சந்திரசேகர் (Pastor சந்துரு) அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், சிஸ்டர் ஸ்டெலா சந்திரசேகரின் அன்புக் கணவருமாவார்.

அன்னாரது நல்லடக்க ஆராதனை 17-02-2024 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணிக்கு "பெத்தேல் திருச்சபை" இல- 55, கோவிந்தன் வீதி, மட்டக்களப்பில் நடைபெற்று, திருவுடல் நல்லடக்கத்திற்காக ஆலையடிச்சோலை சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பெத்தேல் திருச்சபை

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2024 05:00)