திரு. கந்தையா ஆனந்தமணி
(இளைப்பாறிய பொறியியலாளர்)
தோற்றம்: 20 பெப்ரவரி 1937 - மறைவு: 02 ஜூலை 2022
கொழும்பு மவுண்ட்லவினியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு கொள்ளுப்பிட்டி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆனந்தமணி அவர்கள் 02-07-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பேரம்பலம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மினி அவர்களின் அன்புத் தந்தையும்,
Dr.ஜெயரூபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஹரிஷ், அக்ஷாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, அருள்நாயகி, விஜயரட்னம், நித்தியரட்னம் மற்றும் ஜெயராணி, இந்திராணி, செல்வராணி, யோகராணி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சிவசிதம்பரம், தர்மராஜா, கார்த்திகேசன் மற்றும் மயில்வாகனம், சண்முகமணி, பொன்னம்பலம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
