Mr Kandiah Anantharajah
Date of Birth: 04 January 1948 - Deceased: 14 April 2023
யாழ். நீர்வேலிஅச்செழுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆனந்தராசா அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருகனும்,
ஜெயந்திமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
திருவேணி (பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜெயரூபன் (பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
பாசினி, ரிசோத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஞானாமிர்தம் மற்றும் கந்தசாமி, அமிர்தராணி, பத்மநாதன், சண்முகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி, தனலட்சுமி, பேரின்பநாயகம், ஏகாம்பரநாதன், சிவநாதன், சசிகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் வரதலட்சுமி, சாந்தகுமார், சாந்தினி, விஜயலட்சுமி, துரைராசா, பத்மராணி, ரஜனி, பத்மலோஜினி, தங்கராசா, காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்செழு இந்து மயானத்தில் மு.ப 10:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
