திரு கந்தையா பாலசிங்கம்
தோற்றம்: 31 ஜனவரி 1948 - மறைவு: 13 ஜனவரி 2024
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், Baden சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பாலசிங்கம் அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
திவியமலர் (கனடா), திவியகுமார் (கனடா), திவியராகினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
இரத்தினசிங்கம் (சுவிஸ்), இலங்கநாதன் (கனடா), பற்குணராஜா, கமலாதேவி, காலஞ்சென்ற விமலாதேவி, புஸ்பதேவி, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திரவியம், ஆனந்தன் மற்றும் வசந்தகுமாரி (கனடா), காலஞ்சென்ற நவசீலன், திருச்செல்வம் (ஜேர்மனி), கர்ணாநிதி (ஜேர்மனி), லலிதகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நந்தகுமார் (கனடா), ஜீவதனுஷா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதுன், கம்ஷவி, கஜீலாஸ், யதுர்சிகள் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
துயிந்தன், துஷானியா, ரிஷானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
