திருமதி. கந்தையா நாகேஸ்வரி அம்மா

கந்தையா நாகேஸ்வரி அம்மா

தோற்றம்: 12 செப்டம்பர் 1941 - மறைவு: 02 ஆகஸ்ட் 2022

யாழ். கைதடி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகேஸ்வரி அம்மா அவர்கள் 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
அருந்ததி(ஜேர்மனி), அன்பழகி(சுவிஸ்), அகிலா(சுவிஸ்), அமுதா(பிரான்ஸ்), அகிலன்(ஐக்கிய அமெரிக்கா), அஞ்சலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காசிப்பிள்ளை(ஜேர்மனி), சுபாஷ்கரன்(சுவிஸ்), ரமணிதரன்(சுவிஸ்), இரமேஷ்(பிரான்ஸ்), குகேதினி(ஐக்கிய அமெரிக்கா), சசிகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
சக்தீபன், அபிரா, சதீவன், ஐஸ்வர்யா, அர்ஷ்சுதா, சஞ்ஜீவன், ரணுஜன், தனோஜனன், தகானா, ஜஷ்வந்தி, லவதீசன், விஷ்ணுசெல்லத், அபிராமி, அஸ்வினி, சித்தாத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
வீரத், ஜானு, றீயோ, அஹானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
 
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், விக்னேஸ்வரன்(சுவிஸ்), தெட்ஷணகைலாயபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வள்ளிப்பிள்ளை, சுப்பிரமணியம், செல்லத்துரை, சண்முகரத்தினம், வீரசிங்கம் மற்றும் சிவபாக்கியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம் மற்றும் யோகராணி(சுவிஸ்), இராஜினிதேவி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊரியான் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2022 05:54)