திரு. கந்தையா இராஜகிருஷ்ணர்

(இளைப்பாறிய Operating Assistant தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம்)

கந்தையா இராஜகிருஷ்ணர்

தோற்றம்: 06 பெப்ரவரி 1930 - மறைவு: 05 ஜூன் 2022

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராஜகிருஷ்ணர் அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற தலையாழி கொக்குவில் இராசரத்தினம் தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சகுந்தலாதேவி (பூபதி) அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன் (டென்மார்க்), கருணாகரன் (லண்டன்), சேகரன் (அவுஸ்திரேலியா), சுகந்தி (கனடா), மிருபாகரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவசக்தி, சிவாஜினி, சிவகங்கா, சிவகுமார், சத்தியபாமா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றூபன், ஆதினா, வர்ஷன், லோகன், ஷேன், நிதுஷன், காஞ்சனா, யதுமிதா, ஜீபனா, ஜீபதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து, தியாகராசா, இராசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நீலாயதாட்சி, ஞானகாந்தன், ஞானசோதி ஆகியோரின் மைத்துனரும்,

நேசமலர், அன்னலட்சுமி, புனிதராணி, காலஞ்சென்ற கந்தசாமி, ஜெயந்தி, ரஞ்சன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-06-2022 திங்கட்கிழமை அன்று அஞ்சலிக்காக பி.ப 4:00 மணிமுதல் பி.ப 8:00 வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 8:00 மணியளவில் நடைபெற்று, மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2022 05:44)