Mr. Kandiah Rasarathinam
Date of Birth: 10 October 1943 - Deceased: 04 December 2025
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசரத்தினம் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று தனது சரீரத்தை விட்டு கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராசநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பரமேஸ்வரி (கண்டு - பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி (பேபி), மார்க்கண்டு (துரை), சந்திரா மற்றும் மகேந்திரன் (இந்திரன் - ஸ்பெயின்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இராஜபாமா, இராஜஜீவா (கனடா), காலஞ்சென்ற இராஜசேகர், இராஜபாகர் (கனடா), இராஜகுமார், இராஜசுதாகர் (கிராம சேவையாளர்), இராஜராதிகா, ரௌமியா (இத்தாலி), சர்மிலன் (போதகர்), டிலெக்சன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சத்தியதேவன், திருச்செல்வம் (கனடா), பிரியந்தி, உதயவாகினி, விஜிதா, கனகாங்கி (ஆசா), முருகானந்தா, ரஜனிகாந்த் (இத்தாலி), ஏஞ்சலின், எஸ்தர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா (கனடா), கெற்ஷியா, ரணீஸ், பேர்ணாட், றெஜினோல்ட், செருஜா, அபினதாப், ஜெருஅனா (கனடா), செருஜன், ஜொயானா (கனடா), ஷைனி, றொஸ்னி, ஜெசிக்கா (கனடா), அக்ஷரா, வைஸ்னி, ஜோனதாப் (இத்தாலி), மெஸ்லி, ஜொய்ஸ்னி, லியா, தேனுஜன், சுஜித்தா, ஜெசினா ஆகியோரின் அன்புமிகு பேரனும்,
அகானாவின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 06-12-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் அல்லாரை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
