திரு. கந்தையா சண்முகதாசன்
(உரிமையாளர் - ஆனந்தா அச்சகம்)
தோற்றம்: 30 ஜூலை 1946 - மறைவு: 09 ஜனவரி 2025
யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சண்முகதாசன் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - ஜெயலட்சுமியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தவமலரின் அன்புச் சகோதரனும்,
நிஷ்கலா (CEO - Advent Projects (PVT)Ltd), சேந்தன் (ஜேர்மனி), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துவாரகன் (Director- Advert Exalt Pvt Ltd), லக்ஸ்மீரா (ஜேர்மனி) ஆகியோரின் மாமனும்,
ஜெய்ஸ்ணவ, லக் ஷிதா, நயணிகா, திபிக் ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ரஞ்சனி, ரஞ்சன், சுகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் தாய்மாமனும்,
உமாதேவி, மகேந்திரன், காலஞ்சென்றவர்களான செல்வராணி, வரதராஜா, லக் ஷ்மிகாந்தன் மற்றும் செல்வராஜேஸ், சந்திரகாந்தன், யசோதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
