திரு. கந்தையா சண்முகநாதன் (செல்லமணி)
(கரம்பொன் முன்னாள் கிராமசபை உறுப்பினர்)
தோற்றம்: 13 ஜூன் 1934 - மறைவு: 15 ஜனவரி 2024
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், குளியாப்பிட்டி, Heilbronn, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சண்முகநாதன் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - கௌரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சிதகுமார் (ஜேர்மனி), மதிவதனி (ஜேர்மனி), மதிராஜனி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌரி (ஜேர்மனி), யோகநாதன் (ஜேர்மனி), கேதீஸ்வரநாதன் (Thinesh Jewellers & Textiles London) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பபித்ரா, ஜனோசன், பிரியங்கா, நிரோஜன், நிவேதன், தினேசன், சஞ்சீவன், ஜனகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிரிஷான் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகனம்:-
www.tamilthakaval.org
