திரு கந்தையா தனபாலசிங்கம்
((ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் - சண்டிலிப்பாய்க் கோட்டம்)
மறைவு: 03 டிசம்பர் 2019
கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் உடுவில் மகளிர் கல்லூரி மேற்கு வீதி, உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தனபாலசிங்கம் (03.12.2019) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவமலரின் அன்புக் கணவரும்,
துஷாந்த் (ஆசிரியர் - யா/மானிப்பாய் இந்துக்கல்லூரி), துஷிந்தா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தக்சாயினி (ஆசிரியர்- கிளி/இரணைதீவு றோ.க.த.க பாடசாலை), முரளிதரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஹர்சன், ஆராதனன், அனோஜி (லண்டன்), ஆருஜா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவபாக்கியம், இன்பஜோதி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
மார்க்கண்டு, காலஞ்சென்றவர்களான தேவராஜன், செல்வராசா மற்றும் இராசரத்தினம், தங்கராஜா, வசந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.12.2019) வியாழக்கிழமை பி.ப 1.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மருதனார்மடம் பூவோடை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லலப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
உடுவில் மகளிர் கல்லூரி,
மேற்கு வீதி, உடுவில்.
தகவல்: குடும்பத்தினர்
+94 77 662 4592
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2019 03:07)
