திரு. கந்தையா தில்லையம்பலம்
(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர், வதிரி சனசமூக நிலைய போஷகர், சபைத் தலைவர்- வதிரி மாணிக்கப் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா, முன்னாள் பொருளாளர்- வதிரி கனகசிங்கப் பிள்ளையார் ஆலய, முன்னாள் பரிபாலன சபைத் தலைவர)
தோற்றம்: 07 மே 1922 - மறைவு: 27 டிசம்பர் 2021
யாழ். வதிரி கரவெட்டி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தில்லையம்பலம் அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சோதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அருமைக் கணவரும்,
விஜயகுமார் (ஓய்வுபெற்ற கணக்காளர்- வவுனியா), காலஞ்சென்ற உமாகாந்தன், பவானி (ஓய்வுபெற்ற பிரதி புகையிரத களஞ்சிய அத்தியட்சகர்), குகேந்திரன் (பிரான்ஸ்), உமா (உதவி முகாமையாளர்- இலங்கை வங்கி, பருத்தித்துறை), காலஞ்சென்ற உஷா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
அம்பிகா (ஓய்வுபெற்ற நூலகர்- வவுனியா), சூரியகுமாரி (கனடா), பத்மநாதன் (ஓய்வுபெற்ற சிறாப்பர்), விஜயகுமாரி(பிரான்ஸ்), வரதீஸ்வரன் (செயலாளர்- உள்ளூராட்சி அமைச்சு, வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்தியன் (கனடா), உஷாந்தினி, கஜேந்திரன், நித்யா, அக்ஷயா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
www.tamilthakaval.org
