திரு. கந்தையா திருநாவுக்கரசு
(இளைப்பாறிய அதிபர்)
தோற்றம்: 05 செப்டம்பர் 1930 - மறைவு: 20 ஜூன் 2021
யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகசபை, தங்கப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கந்தையா சுப்பிரமணியம்(மலேசியா, கோலாலம்பூர்), விநாயகமூர்த்தி சரஸ்வதிஅம்மா(கனடா), காலஞ்சென்ற கந்தையா இராசநாயகம்(கருகம்பனை), கந்தையா ஜீவரட்ணம்(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயராணி (கனடா), உதயகுமார் (கொழும்பு), அகிலகுமாரன் (மாதகல்), செந்தில்குமரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணதயாளன் (கனடா), இந்துமதி (கொழும்பு), வாசுகி (மாதகல்), ஜனனி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துசீலன், தீபிகா, யதுஷன், யஷ்வின், துஷாயினி, சதுர்ஜனன், அமிதேஷ், அஷ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
