திரு. கந்தையா தியாகராஜா

கந்தையா தியாகராஜா

தோற்றம்: 14 ஜூன் 1947 - மறைவு: 21 செப்டம்பர் 2025

யாழ். காரைநகர், களபூமி, விளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தியாகராஜா அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு - வள்ளியம்மை தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சுசீலாதேவி (பிரித்தானியா), விநாயகமூர்த்தி, விமலாதேவி (பிரித்தானியா), விக்னேஷ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவானந்தன் (பிரித்தானியா), கௌரி, ரவீந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகுல் (பிரித்தானியா), நிரோசனன், கோபீசன் (பிரித்தானியா), தக்‌ஷயா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

தேவராசா, புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-500, மின்சார நிலைய வீதி, திருகோணமலை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2025 04:00)