Mr. Kandiah Thurairasa

Kandiah Thurairasa

Date of Birth: 11 August 1935 - Deceased: 03 May 2025

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், மாடந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா துரைராசா அவர்கள் 03-06-2025 செவ்வாய்கிழமை அன்று இறைபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - ஆச்சிமுத்து தம்பதியினரின் ஏக புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி- சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜபூபதி (ராணி அம்மா) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற இராசேஸ்வரி அவர்களின் பாசமிகு சகோதரரும்,

தங்கம்மா, காலஞ்சென்றவர்களான  தவமலர், சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவேந்திரன் (ஜேர்மனி), சிவநந்தினி (ஜேர்மனி), நந்தகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஸ்பலதா, ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலினி, குமுதினி, நாதன் ஆகியோரின் தாய் மாமனும்,

மகேஸ்வரலிங்கம், லிங்கேஸ்வரி, உமா, ஞானேஸ்வரி, சறோஜினிதேவி, சின்னராசா, ரஞ்சன், காலஞ்சென்றவர்களான செல்வம், லிங்கன், குகன், வரதன் ஆகியோரின் சித்தப்பாவும்,

லக்சிகா, சாருஜன், றோசினி, நவீன், ரிதன், மானுகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-06-20125 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2025 09:56)