திரு. கணேசன் பத்மசோதி
(Hamm Sri காமாட்ஷி அம்மன் ஆலய ஆஸ்தான், தவில் வித்வான்)
தோற்றம்: 11 ஜூன் 1962 - மறைவு: 20 மார்ச் 2023
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bielefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசன் பத்மசோதி அவர்கள் 20-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இரத்தினம் பாக்கியம் தம்பதிகள், இரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கணேசன் (நாதஸ்வர வித்வான்), சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,
அனுசியா அவர்களின் அன்புக் கணவரும்,
கருணா, கவி, தர்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பரமானந்தவல்லி, சந்திரசோதி, தேனுகா (கொலண்ட்), சிவசோதி (ஜேர்மனி), சுவர்ணாங்கி (பிரான்ஸ்), இந்துமதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணசேகரன் (கனடா), விஜயகுமார் (ஜேர்மனி), முரளீஸ்வரன், ஜெயபாலன் (பிரான்ஸ்), நித்தியகெளரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சர்மிளா, சைந்தவி, அஸ்வத்தாமன், ஆரபி, ஆகாஷ், கெளதமன், கெளசிகன், கெளதமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுமிதா அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான N. R.கோவிந்தசாமி (நாதஸ்வரவித்வான்), N. R. சின்னராஜா (தவில் வித்வான்) மற்றும் N. R. சந்தான கிருஷ்ணன் (இலங்கை வாழ் நாதஸ்வர வித்வான்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
