Mr. Kanthalingam Sathiyaseelan
(ஓய்வு நிலை கிளை முகாமையாளர்- ஏறாவூர் வடக்கு மேற்கு ப. கூ. ச, செங்கலடி)
Date of Birth: 04 April 1954 - Deceased: 03 January 2025
மட்டக்களப்பு - சித்தாண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தலிங்கம் சத்தியசீலன் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தலிங்கம் - மனோன்மணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹர்ஜனா (தொழில்நுட்ப உதவியாளர் - விவசாய திணைக்களம், கரடியனாறு), சஞ்ஜிதா (இலண்டன்), பிரவீனா (ஆசிரியை - திரு/ ஸ்ரீ மாதுமை அம்மாள் வித்தியாலயம்), பேஷாந் (யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன் (இலண்டன்), நிஷாந்தன் (Swiss Kiss Beach Resort - திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியநாதன் (ஓய்வு நிலை வலயக்கல்விப் பணிப்பாளர்), சத்தியமூர்த்தி (அவுஸ்திரேலியா), சத்தியவரதன் (ஓய்வு நிலை அதிபர்), சத்தியகீர்த்தி (ஓய்வு நிலை ஆசிரியர்), சத்தியகாந்தன் (ஆசிரியர்), சத்தியானந்தன் (அம்பாறை மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்), சத்தியவாணி (அபிவிருத்தி உத்தியோகத்தர்), சத்தியவாணன் (ஏறாவூர் வடக்கு மேற்கு ப.நோ. கூ.ச, செங்கலடி), தசரதன் (சுவிஸ்), தமயந்தி, அசோகன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் - கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, பாக்கியம், தெய்வானைப்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,
விமலாதேவி, குணநாயகி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,
கந்தசாமி, ஹரிதாசன் ஆகியோரின் சகலனும்,
கைஷ், ஸகிந்த் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சித்தாண்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
