Mr. Kanthasamy Swargaloganathan
Deceased: 12 March 2025
யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும். கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சுவர்க்கலோகநாதன் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கந்தசாமி (தலைவர் துரையர்) - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
வசந்தாதேவி (வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
தேவாம்பிகை, ஜெகதீஸ்வரி, நடராசராமலிங்கம், பராசக்தி, இராசலட்சுமி, பரமானந்ததேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
வேலுப்பிள்ளை, செல்வரத்தினம், திலகேஸ்வரி, சதானந்தசிவம், லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண், அரன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,
கஜானா, திலக்ஜனா, பாமினா, சங்கீதன், மதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
