திரு. காராளசிங்கம் சுஜீவன்
(ஆசிரியர் - வவு/ வெளிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, யாழ்.ஊறணி கனிஷ்ட வித்தியாலயம்)
தோற்றம்: 03 ஏப்ரல் 1984 - மறைவு: 27 ஏப்ரல் 2025
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காராளசிங்கம் சுஜீவன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காராளசிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்- மகாஜனக்கல்லூரி, அருணோதயா கல்லூரி, ஓய்வுநிலை அதிபர் - தந்தை செல்வா தொடக்க நிலை பள்ளி, குப்பிளான் விக்னேஸ்வரா கல்லூரி) - வடிவாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,
கந்தையா - புஸ்பராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
தினாஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,
பிரணவன், தாட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகதாசன், சயனுதா, அயந்தினி, டினேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீவாமிர்தம் அவர்களின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2025 புதன்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கீரிமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
