திரு. கார்த்திகேசு கந்தையா (சிவசெல்வம்)

(அருட்பா அமுதனார், ஞான பஜன வித்தகர்)

கார்த்திகேசு கந்தையா (சிவசெல்வம்)

தோற்றம்: 25 டிசம்பர் 1936 - மறைவு: 16 டிசம்பர் 2021

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nanterre ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு கந்தையா அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அபிராமியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற திசைவீரசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

முருகதாஸ் (பிரான்ஸ்), சதீஸ்குமார் (நோர்வே), அபிராமிச்செல்வி (லண்டன்), திபாகரன் (லண்டன்), ஜெயந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவானி, ஜெகதா, தர்மராஜா, சண்முகப்பிரியா, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபமிதா, சுபதயன், சுபஹரீஷ், வர்ஷினி, தக்‌ஷி, தர்மிகா, அபிநயன், கவிநயா, கவியுகா, அணுகன், மிருதினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பவளம்மா, திலகவதி, புனிதவதி மற்றும் கமலாவதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, சற்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகிர்தலட்சுமி, காலஞ்சென்ற தவலட்சுமி, தவராஜசிங்கம், கிருபாலட்சுமி, கமலவேணி, திருக்கைலாயவாசன், யோகாலட்சுமி, தவக்குமார், லோகநாதன், குகதாஸ், சுவேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திலகராணி, திலகராஜன், கிருஸ்ணவேணி, பாலசங்கர், சிவப்பிரியா ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2021 13:49)