திரு கார்த்திகேய ஐயர் கணேஸ்வரக்குருக்கள்
(முகத்துவாரம் சர்வாத்த சித்தி விநாயகர் ஆலய சிவாச்சாரியார்)
தோற்றம்: 25 ஜூலை 1971 - மறைவு: 20 ஜனவரி 2024
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரம், கொட்டஞ்சேனையைப் வசிப்பிடமாகவும் கொண்டவரும் கொழும்பு முகத்துவாரம் சர்வாத்த சித்தி விநாயகர் ஆலய சிவாச்சாரியான திரு கார்த்திகேய ஐயர் கணேஸ்வரக்குருக்கள் அவர்கள் இன்று 20-01-2024ம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற முள்ளிவளை கார்த்திகேய ஐயர் - புவனேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்புப் பவதல்வரும்,
பொன்னாலை நித்தியானந்தக் குருக்கள் - கனகாம்பிகை (சீதா-கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீவித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்தீஸ்வரசர்மா, நிஷாந்தினி, கார்த்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கங்கா, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீவைநிகா, ஸ்ரீவிதார்த், ஸ்ரீவிகாஷ், ஸ்ரீவிருக்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கலாதேவி (தெல்லிப்பழை), காலஞ்சென்ற ரதிதேவி, இரகுநாதக்குரு்கள் (முள்ளியவளை), சித்திரமாலா (வற்றாப்பளை), காலஞ்சென்ற ஓம்குகசர்மா, வரதராஜசர்மா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீபாலச்சந்திரக்குருக்கள் (கனடா), ஸ்ரீரஞ்சினி (கனடா), ஸ்ரீரம்யா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் புஞ்சிபொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நாளை 21-01-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று 2:00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/01/2024 23:22)
