Mr. Karuppaiyapillai Ganeshan

Karuppaiyapillai Ganeshan

Deceased: 14 February 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் நடுவலூர் ஆழத்துடையான் கோத்திரம், கண்டி - கலஹாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் திரு. கருப்பையாப்பிள்ளை கணேஷன் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கருப்பையாப்பிள்ளை - பச்சை அம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற தங்கவேலுபிள்ளை - மல்லிகா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற சுவர்ணா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன் (Pharmaxx), கேதீஸ்வரன், சுகன்யா ஆகியோரின் அன்பு தந்தையும்,

ரமேஸ்குமார், ஷாய்ரேகா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராசம்மா, காமாட்சி, கந்தசாமிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான செல்லம்மாள், சிவபாக்கியம், விசாலாட்சி ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற பெரியசாமிப்பிள்ளை - தெய்வானை,  காலஞ்சென்ற சாம்பசிவம்பிள்ளை - நிர்மலா, திரு. நீலமேகம் ஆகியோரின் சம்பந்தியும்,

வினேஷ், தனேந்திரா ஆகியோரின் தாத்தாவும்,

ரிஷிகேஷ், டனிக்ஷன், டனிக்ஷா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-02-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணி முதல் லங்கா மலர்ச்சாலை (No-102, E.W.Perea Mawatha, Punchi Borella, Colombo-08) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று,  முற்பகல் 10:30 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2025 05:00)