Mr. Kasinathar Varnakulasingham (Vellai Anna)
Date of Birth: 18 July 1952 - Deceased: 18 December 2024
"ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ"
யாழ். நல்லூர், இல-21, கன்னாரலேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிநாதர் வர்ணகுலசிங்கம் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - இராசலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹேசிகா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தினேஷ்கரன், அரசகுமார் ஆகியோரின் மாமனாரும்,
பாலசுப்பிரமணியம், தங்கபூபதி, தியாகராஜா, மகேந்திரராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
