திரு. கார்த்திகேசு வைத்தியலிங்கம் மகேந்திரன்
(சட்டத்தரணி நம்பிக்கை ஆணையாளர்)
தோற்றம்: 03 நவம்பர் 1942 - மறைவு: 21 ஏப்ரல் 2024
யாழ். கடையிற் சுவாமி கோவில் வீதி, நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. V. மகேந்திரன் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வைத்தியலிங்கம் (உரிமையாளர் - வைத்தியலிங்கம் மரக்காலை - யாழ்ப்பாணம்) - மணியம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
யசோதரா அவர்களின் அன்புக்கணவரும்,
சஞ்சீவனின் பாசமுள்ள தந்தையும்,
திருநீலநாயகி, விமலநாயகி, காலஞ்சென்றவர்களான சொரூபராணி, தவராணி மற்றும் கமலராணி, இந்திரராணி, K. V. சுசீந்திரன், K. V. ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கீர்த்திசிங்கம், சிவராசா மற்றும் கனகரட்ணம், காலஞ்சென்ற துவாரகன், சண்முகலிங்கம், காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் 24-04-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
46, 2/31 IBC வீதி,
வௌ்ளவத்தை.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 71 516 4235 / +94 11 250 3208
www.tamilthakaval.org