திரு. கதிரவேலு குமாரசாமி

கதிரவேலு குமாரசாமி

தோற்றம்: 20 மார்ச் 1942 - மறைவு: 14 ஜூன் 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நீர்வேலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு குமாரசாமி அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராசமலர் (மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கமலேஸ்வரி, யோகேஸ்வரி, சிவசுப்பிரமணியம், நடராசா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சுஜித்தா, சுரபி, சயந்தன், துர்கா, குகதர்சினி (குமுதா), நந்தகோபி (நந்தா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சிவகுமார், சோபா, ரமேஸ், உதயகுமார், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவீனா, பிரவீமன், பாடினி, ஆருனி, சபிநயா, தனோ, அப்ஷனா, அனிர்வன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் கந்தசாமி கோவிலடி, நீர்வேலி தெற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2025 04:00)