(11-01-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்10:00 மணியளவில் - SL time)

திரு. கதிர்காமத்தம்பி சித்திரவேல்

கதிர்காமத்தம்பி சித்திரவேல்

தோற்றம்: 26 நவம்பர் 1945 - மறைவு: 06 ஜனவரி 2026

திருகோணமலை - சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - செல்வநகரையும், தற்போது மாகியப்பிட்டி சண்டிலிப்பாய் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமத்தம்பி சித்திரவேல் அவர்கள் 06-01-2026 செவ்வாய்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி - பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரட்ணம் - நாகரட்ணம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

புஸ்பரட்ணம் (புஸ்பம்) அவர்களின் அன்பு கணவரும்,

சங்கீதா, காலஞ்சென்ற சஞ்ஞீவ் மற்றும் சுஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கம்சன், ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்னா, அஸ்மித் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இராமநாதன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

ஜெயம், மகேஷ்,  கருணா, லக்னா, கமலேஷ், மனோகரன், செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேவன், சண்முகம், ரவிச்சந்திரன், செல்வி, வசந்தி, ராணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-01-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பத்துப்பனையடி அளவெட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

மாகியப்பிட்டி சந்தி அருகாமை

மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2026 00:14)