Mrs. Kathirkamanathan Kamalabal
Deceased: 25 April 2025
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமநாதன் கமலாம்பாள் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் அன்பு துணைவியாரும்,
சியாமா, மகிந்தன் சுகந்தன், ஆகியோரின் அன்பு தாயாரும்,
புஷ்பராணி, ஜெயரட்ணம் (இலண்டன்), தில்லைநாயகி (கனடா), டிபாலதாஸ் (கனடா), காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, மகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்மினி, சத்தியபாமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகணா, தமிழினியின் குயிலினியன், தனுசிகா, திவாகர் ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
தபால்கட்டை சந்தி, கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
