Mr. Kathirvelu Nagarasa
Deceased: 01 February 2026
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்வேலு நாகராசா அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்வேலு - கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராசா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுபத்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,
சங்கவி, ஜீவிதா, கம்சா, மதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவநிரூபன், இளங்கோ அவர்களின் அன்பு மாமனாரும்,
லிசானின் பாசமிகு பேரனும்,
நாகேஸ்வரி, பரமநாதன், மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற மகேஷ்வரன், கணேசமூர்த்தி, சர்வா, வினோதினி, சந்திரா, இந்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெகநாதன், காலஞ்சென்ற சத்தியநேசன், சுலபாமதி ஆகியோரின் சகலனும்,
கயாலினி, கிரிதரன், சுதர்சன், டிலக்சனா, கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனுசா, மனோச், சத்தியேந்திரா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூநாவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
